தகவல் பலகை

தகவல் பலகை : 1203

Author

TNUEF

Date Published

அம்பேத்கர் 69 வது நினைவு நாள்


அன்றைய உறுதிமொழி

இன்றும் பொருத்தமாக


டிசம்பர் 25, 1927 அன்று மகாராஷ்டிராவின் மஹாத் பகுதி பொதுக்குளத்தில் தலித்துகள் நீர் எடுக்கும் உரிமைக்காக டாக்டர் அம்பேத்கர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள் கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.


1. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சதுர்வர்ணத்தை நான் நம்பவில்லை.

2. சாதி வேறுபாடுகளை நான் நம்பவில்லை.

3. தீண்டாமை என்பது இந்து மதத்திற்கு ஒரு களங்கம் என்று நான் நம்புகிறேன், அதை முற்றிலுமாக அழிக்க நான் நேர்மையாக முயற்சிப்பேன்.

4. உணவு மற்றும் குடிநீர் குறித்து யாரிடமும் குறைந்த அளவு எல்லா இந்துக்களிடையேயும் எந்த வேறுபாட்டையும் நான் பின்பற்ற மாட்டேன்.

5. கோயில்கள், நீர் நிலைகள், பள்ளிகள் மற்றும் பிற வசதிகளைப் பெறுவதற்குத் தீண்டத்தகாதவர்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.


இதே போராட்டத்தின் போது சாதி ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும், பெண்களை இழிவு படுத்தும் மனுஸ்மிருதி நூலும் எரிக்கப்பட்டது.


(நன்றி: "நியூஸ் சென்ஸ்")