தகவல் பலகை : 1136

Author

TNUEF

Date Published



உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அம்மா கமலா கவாய்

ஆர்.எஸ்.எஸ் -100 நிகழ்ச்சிக்கு அழைப்பு


அசோக் தாவலே
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஎம்

"எனது தெளிவான கருத்து என்னவென்றால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அம்மா முதலில் கூறிய “நான் அம்பேத்கரிஸ்ட், எனவே நான் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போகமாட்டேன்” என்ற கூற்று அவருடையது எனவே கருதுகிறேன். அது மிகச் சரியான நிலைப்பாடு என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், அவரின் இன்னொரு மகன்
“அம்மா தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளார்” என்று எதிர்கூற்றை வெளியிட்டதைப் படித்து நான் ஆச்சரியப்பட்டேன்.

எனது உண்மையான எண்ணம் என்னவென்றால், இந்தியாவில் மனுஸ்மிருதி கொள்கையை முன்னெடுப்பவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான். மனுஸ்மிருதியை எரித்தவர் பாபாசாகேப் அம்பேத்கர். "மகத்" தில் நடந்த அந்தச் செயல் புரட்சிகரமானது. தன்னை "அம்பேத்கரிஸ்ட்" என்று அழைக்கும் யாரும் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக மேடைக்கு செல்லவே முடியாது, ஏனெனில் அது பாபாசாகேப் அம்பேத்கர் நிலைத்திருந்த அனைத்திற்கும் எதிரான மிகப் பெரிய வஞ்சகம் ஆகும்.

இந்த நிலைப்பாட்டை அவர் மேற்கொண்டால், இந்தியாவின் தலைமை நீதிபதியின் தாயாக இருப்பதாலும், அது மிகச் சிறந்த விஷயமாகும். இது மகாராஷ்டிரா, தவறான அரசியலுக்கு எதிராக எழுந்து நிற்க முடியும் என்பதற்கான ஒரு செய்தியாக இருக்கும்.