தகவல் பலகை : 1171
Author
TNUEF
Date Published
கோல்வால்கரின்
"தேவதைக்" கதை
கோல்வால்கர் கருத்து இது..
“முன்னேற்றத்திற்கு இரண்டு வழிகள் இருக்கலாம். ஒன்று, அரசின் வலிமையால் நாட்டின் செல்வத்தைப் பகிர்ந்து தருவது; இரண்டு, மக்களின் மனதை மாற்றி அதே குறிக்கோளை அடைவது. நாங்கள் ஏற்றுக்கொள்வது மக்களின் மனத்தை மாற்றும் இரண்டாவது வழியை மட்டுமே.”
(ஸ்ரீ குருஜி சமக்ரா, தொகுதி 2, பக். 100–101)
இதுவே ஆர்எஸ்எஸ் சிந்தனையின் சாரம்.
‘முதல் வழி’ என்றால், தனியார் உடமைகள் மற்றும் உற்பத்தி மூலங்கள் அரசுடமைக்குக் கொண்டு வரப்பட்டு, மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் சோசலிச வழிமுறையைக் குறிக்கிறது.
இதனை நிராகரித்த கோல்வால்கர், பணக்காரர்கள் தங்களுடைய செல்வத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்காக தாராளமாக வழங்கும் "தேவதைக்" கதை போன்ற கருத்தை முன்வைக்கிறார்.
(நன்றி : "RSS Economics: From Fairy Tales to Animal Spirits" by Savera - "Peoples Democracy" 02.11.2025)
